search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி மாயம்"

    • ஓசூரில் இளம்பெண் ஒருவர் மாயம் ஆனார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓசூரை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தளி அருகே உளள கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். தனியார் கல்லூரியில் இளங்க லை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 31-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற வர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    அது குறித்து பெற்றோர் தளி போலீசில் புகார் செய்தனர். அதில் தளியை சேர்ந்த ஆறு முகம் என்பவர் மீது சந்தே கம் உள்ளதாக கூறியுள்ள னர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தருமபுரி அருகே கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமானர்கள்
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

        தருமபுரி அடுத்த பழைய தருமபுரி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி, (38) மேஸ்திரி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 17 வயதில் மகள் உள்ளார். இவர் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 17 ந்தேதி காலை கல்லூரி சென்றவர் மதியம் உணவு சாப்பிடுவதற்கு வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் கல்லூரி வரவில்லை என தெரிகிறது. இதனை யடுத்து கல்லூரி ஆசிரியை முனுசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். சிறுமியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் பாலகோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அதே போன்று தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எல்லபுடையாம்பட்டி கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பையன் (52) இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மகள் பிரியா (19) அருகே உள்ள கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் உடல்நிலை சரியில்லை என கடந்த 16 ந்தேதி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அன்று மதியம் 1 மணிக்கு மேல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும், உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் விசாரித்தும் அவர் குறித்த தகவல் தெரியவில்லை. இது குறித்து சின்னப்பையன் அளித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி பிரியாவை தேடி வருகின்றனர்.

    • கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • உறவினர்கள் வீடுகளில் தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் அரக்கோணத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இளம்பெண் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அவளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடினர்.

    மாணவி கிடைக்காததால் பெற்றோர் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • பெரியசாமி மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
    • நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி கிராமம் புதூர் காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெரியசாமி குடும்பத்தினர் அக்கம் பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்காத நிலையில் தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
    • போலீஸ் நிலையத்தில் புகார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சின்னபள்ளிகுப்பத்தில் இலங்கை தமிழ் வாழ் மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது.

    இங்குள்ள கூலி தொழிலாளியின் 14 வயதுடைய மகள் அதே பகுதியில் 10- வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாணவி நேற்று காலை சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அவர் கிடைக்காததால் உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் அங்கு செல்லவில்லை.
    • பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் மகாலட்சுமி (16). அப்பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அங்கு செல்லவில்லை.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிளஸ்-1 படித்து வருகிறார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஆம்பூர் அடுத்த நாயக்னேரி பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுமி. இவர் ஏலகிரி மலையில் உள்ள புங்கனூர் கிராமத்தில் தனது தாத்தா சின்னராஜ் என்பவரின் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி காலை தனது தாத்தாவிடம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ஏலகிரி மலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமன போன சிறுமியை தேடி வருகின்றனர்.

    • மேல்சாத்தம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து கொண்டிருந்த இவர் கடந்த 1 மாதமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
    • இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரீனாவை காணவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே சிங்கிலிபட்டி பகுதியை சேர்ந்தவர் வீரமணி (45). இவரது மனைவி நல்லம்மாள் (38). இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவரது மகள் ரீனா (19).

    மேல்சாத்தம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து கொண்டிருந்த இவர் கடந்த 1 மாதமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரீனாவை காணவில்லை. இதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் ரீனாவை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து நல்லம்மாள் வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி ரீனாவை தேடி வருகின்றனர்.

    • பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி கடந்த 6-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து பெற்றோர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுக் கரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பதறிப்போன சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர்.
    • எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே மிட்டாஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாயார் சிங்காரப் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    இதேபோன்று மகனூர் பட்டியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தாயார் அளித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    • நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தேக்கல் நாய்க்கன் பட்டியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் அந்தமாணவி நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து மாணவியின் தந்தை கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகின்றனர்.

    ×